-நஜீப்-
பிரித்தானியா மகா ரணியின் இறுதி வைபவத்துக்குப் போய் இருந்த ஜனாதிபதி ரணில் தனது மனைவி மைத்ரி மற்றும் தனது அரசியல் வாரிசு ருவன் விஜேவர்தன ஆகியோருடன் அங்கு போய் இருந்தார்.
போன இடத்தில் பிரித்தானியாவில் வாழ்கின்ற இலங்கையருடனான சந்திப்பு என்ற ஒரு கூட்டத்தையும் அவர் அங்கு நடத்தி இருக்கின்றார். அந்தக் கூட்டம் படுதோல்வி என்று அங்கிருந்து நமக்குக் கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்தில் மிகச் சிறிய ஒரு தொகையானவர்களே கலந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் பெரும்பாலானவர்கள் அங்கிருக்கின்ற தூதுவராலயத்தில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் என்பதும் தெரிய வருகின்றது.
விபரம் புரிந்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தை ஜனாதிபதி ரணில் தவிர்த்திருக்க வேண்டும் என்று அங்கலாயித்திருக்கின்றார்கள். அங்கு பேசிய ரணில் அனைவரும் ஒன்றிணைவது பற்றியும் இந்த நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது பற்றியம் பேசி இருக்கின்றார்.
கூட்டத்தில் இந்தக் கருத்துக்களை பேசி என்னதான் நடக்கப் போகின்றது.
நன்றி: 25.09.2022 ஞாயிறு தினக்குரல்