-நஜீப்-
ஜனரஞ்சகமான நமது ஹீரோ – அனைத்துப் பல்கலைக்கழகங்களின் மாணவ அமைப்பின் அழைப்பாளி வசந்த முதலிகே கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார்.
அவரை தொன்னூறு நாட்கள் தடுப்புக்காவலில் வைத்திருக்க ஜனாதிபதி தனது கையொப்பத்தை போட்டிருக்கின்றார்.
தேவைப்பட்டால் இன்னும் பதினெட்டு மாதங்கள் அவரை சிறையிலே அடைத்து வைத்திருக்கவும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை ஆளும் தரப்பினர் பாவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
இவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற பல இடங்களில் இருந்து இவருக்கு ஆதரவாக குரல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஐ.நா. மனித உரிமைகள் அமர்வில் கூட இவர் விடுதலைக்காக பேசப்பட்டிருக்கின்றது.
இந்த நேரத்தில்தான் ஜனாதிபதி ரணில் இவரைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதற்கான தனது அனுமதியை வழங்கி இருக்கின்றார். இதிலிருந்து சர்வதேசத்தின் வேண்டுகோளைக் கூட இந்த அரசு ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
இந்த வசந்த முதலிகே சிறையில் வழங்கப்பட்டிருக்கும் ஒரே சலுகை, உறங்குவதற்கு ஒரு பாய் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்று அவரை பார்த்தவர்கள் மூலம் தெரியவந்திருக்கின்றது.
நன்றி: 18.09.2022 ஞாயிறு தினக்குரல்