பசில் பதவி விற்பனை!

-நஜீப்-

தம்மிக்க பெரேரா என்ற செல்வாக்கு மிக்க வர்த்தகருக்கு தேசிய பட்டியல் உறுப்புரிமையை பசில் ராஜபக்ஸ விற்பனை செய்தார் என்று பகிரங்கப்படுத்தி இருக்கின்றார் சர்ச்சைக்குரிய மேர்வின் சில்வா.

இந்தக் கதையில் உள்ள உண்மைத் தன்மை பற்றி அவர்தான் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால் மிஸ்டார் டென் பேர்ஷன் என்று அழைக்கப்படுகின்ற நமது பசில் பற்றிய இந்தக் கதையை மக்கள் நிச்சயம் நம்புவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்.

இணையத் தளம் ஒன்றுக்கு மேர்வின் வழங்கிய செவ்வியில் இந்தக் கதை சொல்பபட்டிருக்கின்றது. ஒரு பில்லியன் ரூபாய்களை வழங்னார் என்று அவர் அந்தப் போட்டியில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்குள்ள வரப்பிரசாதங்களைப் பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் பேசலாம்.

ஆனால் மேர்வின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரல்ல எனவே இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்ப்பில் பசில் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பாரா அல்லது இது போன்று எத்தனை கதைகளை நான் பார்த்திருக்கின்றேன் என்று கண்டு கொள்ளாமால் விட்டு விடுவாரோ தெரியாது பொறுத்திருந்து பார்ப்போம் நடப்பதை.

நன்றி: 11.09.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

இலங்கை அரசு: தொடர் தவறுகள்! அதிர்ச்சியூட்டும் பண வீக்கம்: ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான செயல் உயர் ஆணையர் அறிக்கை

Next Story

ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை பாகிஸ்தானை வென்றது எப்படி?