-நஜீப்-
சஜித் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மரைக்கார் புதிய இராஜாங்க அமைச்சர்கள் பற்றி சொன்ன கதையை ஒரு முறை பாருங்கள்:
அரகலயாகாரர் மீது தாக்குதல் நடாத்தியதற்காக சனத் நிசந்தா.
உரம் என்று மலக் கழிவு இறக்குமதி செய்ததற்கு சசிந்திர ராஜபக்ஸா.
கஞ்சா உற்பாத்தி ஊக்குவிப்பு டயானா
அரந்தலாவை தேரர் படுகொலைக்கு பிள்ளைக்கு
பாராளுமன்றத்தில் மிளகாய்தூள் எரிந்ததற்கு பிரசன்னாவுக்கு இராஜாங்க அமைச்சுக்களைக் கொடுத்து ரணில் உற்சாகப்படுத்தி இருக்கின்றார்.
மைத்திரியின் சுதந்திரக் கட்சியில் இருந்தவர்களில் பெரும்பான்மையானவர்களுக்குப் பதவி வழங்கப் பட்டிருக்கின்றது. இன்னும் அந்தக் கட்சியில் இருக்கும் சிலருக்கு கெபினட் அமைச்சுக்கள் கிடைக்க இருக்கின்றது என்றும் மரைக்கார் குறிப்பிட்டார்.
இது போன்று இன்னும் பல வன்முறையாளர்களுக்கு இந்த அமைச்சுப் பதவிகள் கிடைத்திருக்கின்றன. மரைக்கார் நாமங்களைச் சொல்லா விட்டாலும் பெயர்களைப் பார்த்தால் நீங்கள் புரிந்து கொள்ள முடியும். இதன் பின்னர் இவர்கள்தான் இந்த நாட்டை மீட்டெடுக்கப் போகின்றார்கள்.!
நன்றி: 11.09.2022 ஞாயிறு தினக்குரல்