குயில் முட்டையும் பணமும்!

-நஜீப்-

காகக் கூட்டில்தான் குயில் முட்டையிட்டுக் குஞ்சி பொறிக்கின்றது என்பது அனைவரும் அறிந்த கதைதான். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரணிலின் வரவு செலவுத்திட்டம் பற்றி அர்ஷத டி சில்வா உரையாற்றும் போது இந்த வரவுசெலவுத் திட்டத்தை அவர் காகக் கூட்டில் குயில் போட்ட முட்டை என்று பேசி இருந்தார்.

அத்துடன் இன்று மக்கள் வைத்திருக்கின்ற பணம் அல்லது வங்கிகளில் வைப்பிட்டிருக்கின்ற ஒவ்வொரு இலட்சம் ரூபாவின் உண்மையான பெருமானம் வெரும் முப்பதாயிரம் மட்டுமே. அதில் 70000 ரூபாய்களை ராஜபக்ஸாக்கள் கொள்ளையடித்து விட்டார்கள் என்று கடுமையாகச் சாடியிருந்தார் அர்ஷா.

இதனை அவர் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை அதுதான் நடந்திருக்கின்றது என்பது அனைவரும் அறிந்த கதைதான்.

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு இறாத்தல் பாண்> ஒரு கிலோ அரிசி என்பவற்றின் விலையையும் தற்போதய விலையையும் ஒப்புநோக்கின்ற போது இதன் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். அதே போன்று போக்கு வரத்துக் கட்டணம் எரி பொருள்> சமயல் எரிவாயு விலை என்பவற்றை கற்பனை செய்து பாருங்கள்.

நன்றி: 04.09.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

கோட்டா பிரதமராகும் கதை!

Next Story

செரீனா ஓய்வு:  ரசிகர்கள்  கண்ணீர்