பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஒத்த கருத்து இல்லாத நிலை தொடர்ச்சியாக இருந்து வருகின்றது.
நாடாளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் இதனை பகிரங்கமாகப் பார்க்க முடிகின்றது. தன்னுடன் கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளிலும்; ஒரு தடுமாற்றம் தெரிகின்றது.
அப்படி இருக்க தனது கட்சிக்குள்ளேயும் குழப்ப நிலை. எனவேதான் மனுஷ, ஹரின் போன்றவர்கள் அந்தர் பல்டி. அவர்களைப் போலவே இன்னும் நிறையவே கோடாரிக் காம்புகள் அங்கே இருக்கின்றன.
இது சஜித்துக்கும் தெரியும். அவரது ஆளுமையிலுள்ள பலயீனத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் அவர் தயாங்குகின்றார். தனது பக்கத்தில் இருக்கின்றவர்கள் கூட இன்றும் முதுகில் குத்திக் கொண்டு நடிக்கின்றார்கள்.
இதனை சஜித் அறிவாரோ என்னவோ.? தலைவர் சஜித்துக்குத் தெரியாது பீல்ட் மார்ஷல் தனிப் போக்குப் போவதால் அவரைக் கட்சியிலிருந்து தூக்க தாலைவர் சஜித் நாள் பார்த்திருக்கின்றார். ஆனாலும் இது விடயத்தில் அவர் அச்சப்படுவதும் புரிகின்றது.