இன்று 13ம் திகதி முதல் பதில் ஜனாதிபதியாக ரணிலை ஜனாதிபதி கோட்டா நியமனம் செய்திருக்கின்றார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது ரணில் புதிய பிரதமரை நியமனம் செய்யுமாறு சபாநாயகரைப் பணித்திருக்கின்றார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றைய தினம் நாட்டை விட்டு வெளியேறி சென்ற பின்னர் இன்று காலை ஜனாதிபதியின் கடிதமொன்றின் பிரகாரம் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.