இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பதிவில் அறிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா, ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி. உஷா ஆகியோர் மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
The creative genius of @ilaiyaraaja Ji has enthralled people across generations. His works beautifully reflect many emotions. What is equally inspiring is his life journey- he rose from a humble background and achieved so much. Glad that he has been nominated to the Rajya Sabha. pic.twitter.com/VH6wedLByC
— Narendra Modi (@narendramodi) July 6, 2022
நியமன எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி. உஷா ஆகிய இருவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரை உலகில் 1400 படங்களுக்கு மேல் இசை அமைத்து சாதனைப்படைத்ததோடு, இரண்டு பத்ம விருதுகளையும் பெற்றுள்ள இசைஞானி இளையராஜாவின் கலை இலக்கிய திறமைக்கு கௌரவம் அளிக்கும் வகையில் எம்.பி பதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத், சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெக்டே ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
குவியும் வாழ்த்துக்கள்….
அந்த வகையில், இளையராஜா எம்பியாக நியமிக்கப்பட்டமைக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இசை அமைப்பாளர் இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோர் தேர்வு. திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத், சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெக்டே ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு. உறுப்பினர்களாக நியமனம் செய்ய மத்திய அரசு பரிந்துரை. pic.twitter.com/EyxCHAVNTr
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) July 6, 2022
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் @ilaiyaraaja
— Rajinikanth (@rajinikanth) July 6, 2022