அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த சுதந்திர தின பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தி 6 பேர் உயிரைப் பறித்த சந்தேக நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். 22 வயதே நிரம்பிய அந்த இளைஞரின் பெயர் ராபர்ட் இக்ரைமோ என தெரியவந்துள்ளது.
சிதறி ஓடிய பொதுமக்கள்
சுதந்திர தினத்தை ஒட்டி நடந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கண்கவர் அணிவகுப்பு, குழந்தைகளின் கொண்டாட்டம், இசை நிகழ்ச்சிகள் என அந்த இடமே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருந்தது.
அப்போது ஏதோ ஒரு உயரமான மாடியிலிருந்து திடீரென மக்கள் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிக் குண்டுகள் பாய்கின்றன. என்ன நடக்கிறது என உணர்வதற்குள் பலரும் ரத்த வெள்ளத்தில் சரிகின்றனர்.
பீதியில் மக்கள் அங்குமிங்கும் ஓடுகின்றனர். உடனடியாக போலீஸ் அந்தப் பகுதிக்குள் பிரவேசித்து பொதுமக்களுக்கு உதவுகிறது. துப்பாக்கிச் சூடு எங்கிருந்து நடத்தப்படுகிறந்து என்பதைக் கண்டு கொண்ட போலீஸார் உடனே அந்த சந்தேக நபரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.