லிபியாவில் நாடாளுமன்றத்துக்கு தீ வைத்த மக்கள்…!

ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தை சூறையாடினர்.

கடாஃபியின் மறைவுக்குப் பிறகு லிபியாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

தற்போதைய அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் டாப்ரக் நகரில் உள்ள லிபிய நாடாளுமன்றத்தை சூறையாடிய மக்கள், நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Previous Story

டென்மார்க்கில் துப்பாக்கிச் சூடு - 2 பேர் பலி

Next Story

பாக்.ராணுவத்தை விமர்சித்த பத்திரிகையாளர் தாக்குதல்