எதிர்பார்த்த மரணச் செய்தி!

-நஜீப்-

முன்னைய கப்பல் குறிப்புப் போல்தான் இந்தக் கதையும் எல்லோரும் 21வது அரசியல் திருத்தம் பற்றி நிறையவே நம்பிகையுடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் (12.06.2022) ’21’கானல் நீராகும் என்று குறிப்பை நாம் பதிந்திருந்தோம்.

அது செத்தே போய்விட்டது என்பதுதான் இந்த வாராம் நாம் வாசகர்களுக்குச் சொல்லும் புதிய செய்தி. நீதிக்குப் பொறுப்பான அமைச்சர் விஜேதாச சு.கட்சியுடனான சந்திபிபில் 21கதை கிடையாது. இப்போது 22தான் வருகின்றது.

அது இன்னும் ஓரிருதினங்களில் வர்த்தமானியில் பிரசுரமாகும் எனவும் கூறுகின்றார். எனவே 21 மரணித்து விட்டது. ஐயா சுமந்திரன் வார்த்தையில் சொல்வதாக இருந்தால் மக்கள் எதிர்பார்க்கின்ற எந்த மாற்றமும் புதிய 22 சிபார்சில் கிடையாதாம்.

அப்போ அதனைப் பற்றி  விவாதிக்க என்னதான் இருக்கின்றது. சு.கட்சி சந்திப்பில் இன்னமும் சர்வதேசம் நமது அரசு தொடர்பில் சந்தேகப் பார்வையுடன் காய் நகர்த்துகின்றது என்பதனையும் பகிரங்கமாக விஜே ஊடகச் சந்திப்பில் தெரிவித்திருதார். நம்பிக்கையில்லா குடித்தனம் பண்ண சர்வதேசம் அஞ்சுகின்றதாக்கும்.!

  நன்றி:03.07.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

அடுத்த வாரம் முதல் நாடு முற்றாக முடங்குகிறது! 

Next Story

அரசாங்கத்தை வெளியேற்றும் 2 வது அலையைத் தொடங்கி விட்டோம்.