விலங்கிடப்பட்ட தேசம்!

நஜீப்-

ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஸ தற்போது நீதி அமைச்சர். இலங்கை அரசியலில் விசில் ஓசைக்கேற்ப நன்றாக பல்டி அடிக்கத் கற்றுக் கொண்டவர்களில் ஒருவர். இவர்தான் கருவுற்றிருக்கும் ’21’ குழந்தைக்குத் தாய்.

நமக்கு வருகின்ற தகவல்களின்படி கருக்களைப்புக்கு பல வைத்தியர்கள் கியூவில் நிற்பதாகவும். ஏற்கெனவே கருவில் இருக்கும் சிசு கூட ஆரோக்கியத்துடன் இல்லை என்றும் செய்திகள்.

சரி அந்தக் கதைகள் எப்படிப் போனாலும் பல்டி ஜம்பவான் சர்வதேசத்தின் நம்பிக்கையை நாடு முற்றாக இழந்திருக்கின்றது. எனவே ’21’ குழந்தையை ஆரோக்கியமாகப் பெற்றெடுக்கத் தனக்கு உதவினால் மட்டுமே ஐஎம்எப் மற்றும் சாவதேசம் நமக்கு உதவும் என்று ஆட்சியாளர்களை எச்சரித்து வருகின்றார்.

இதிலிருந்து கருவில் இருக்கும் 21 குழந்தைக்கு களுத்தில் கத்தி என்றுதான் தெரிகின்றது. நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கான தீர்வு அரசியல் தீர்வில்தான் தங்கி இருக்கின்றது என்பது உறுதியாகின்றது. முன்னாள் அமைச்சர் சரத் வீரசேக்கர இப்போது இந்தக் குழந்தை நமக்கு வேண்டாம் என்று நிற்க்கின்றார்.

நன்றி:26.06.2022 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

“மிஸ் இண்டர்நேஷனல் குயின்” பட்டத்தை வென்ற திருநங்கை

Next Story

ரணில் OUT!  தலைவிதியை தீர்மானிக்கும் பசில்