நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று இரவு 8 மணிக்கு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் சரணாகிய பின் வீட்டுக்கு அனுப்பிவைப்பு ….!
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு நேற்றையதினம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மே 9 வன்முறை
கடந்த மே மாதம் 9ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வந்த அமைதி போராட்டத்தில் அரச ஆதரவாளர்கள் என தெரிவித்து வந்த சிலரால் வன்முறை தூண்டப்பட்டது.
அதனை அடுத்து குறித்த பகுதிகளை அண்மித்த பகுதிகளிலும் வன்முறைகள் ஏற்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பிலேயே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.