நாட்டுப் பற்றைக் காட்ட பதவியேற்றதாகக் கூறிய அலி சப்ரியும் ஓட்டம்!

நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஜனாதிபதியிடம் தனது  பதவி விலகல் கடிதத்தை அவர் கையளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து சில அமைச்சர்களும் பதவி விலகியிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக தற்போது நிதி அமைச்சர் அலி சப்ரியும் பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Story

வன்முறையை தூண்டியது மகிந்த: கைது செய்யுமாறு கோரிக்கை

Next Story

கலவரம் வெடிப்பு! ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு  செய்தி