ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் செய்த மோசமான செயல்களின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் அதுகுறித்து விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே பொது மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுள்ளதுடன் ல்கடும் கண்டனங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பொலிஸார் பொது மக்களின் சொத்துக்களை வேண்டுமென்றே சேதப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின் போது புகையிரத நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் சேதப்படுத்தும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.