கோ ஹோம் சாதனைகள்!

நஜீப்

காலிமுகத்திடல் போராட்டத்துக்கு இன்று ஒன்பது நாட்கள். போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையான ‘கோ ஹோம் கோட்டா’ கோசம் அதன் இலக்கை எட்டாவிட்டாலும். இலங்கை அரசியலில் அது பல சாதனைகளைத் தற்போது நிலை நாட்டி இருக்கின்றது.

1.மக்கள் சக்திதான் மிகவும் பலமானது என்பது உறுதிப் படுத்தப்பட்டிருக்கின்றது.

2.இதுவரை அரசியல் தேவைகளுக்காக பிளவு படுத்தப்பட்ட  இனங்கள் ஒருதாய் பிள்ளைகள் போல் ஐக்கியப்பட்டிருக்கின்றார்கள்.

3.அரசியல்வாதிகள் முன் மண்டியிட்ட மக்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள்.

4.ஊழல் அரசியல்வாதிகள் மக்களுக்குப் பயந்து ஒழித்தோடிக் கொண்டிருக்கின்றார்கள்.

5.இதன் பின்னர் இந்த நாட்டில் குடும்ப அரசியலுக்கு இடமில்லை என்ற செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது.

6.அடாவடித்தன அரசியலுக்கு முற்றுப்புள்ளி.

7.மக்கள் சொத்துக்களை கொள்ளையடிப் போருக்கு இந்த நாட்டில் இடமில்லை என்ற எச்சரிக்கை விடுக்கபட்டிருக்கின்றது.

8.தாங்கள் வஞ்சிக்கப்பட்டதை சிங்கள மக்கள் நன்றாகப் புரிந்துள்ளனர்.   எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் விளிப்படைந்திருக்கின்றார்கள்.

நன்றி: 17.04.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

நாட்டை ஒருவாரகாலம் முடக்க ஆலோசனை ! கொழும்பு வரும் ஜேவிபி ஊர்வலத்துக்கு அச்சமா?

Next Story

இளைஞர்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் கெஹெலிய!  அவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுக்கும் தகுதி இவருக்கு இருக்கா?