ஜனாதிபதி-41: கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி முடிவு

ஜனாதிபதி மற்றும் 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இறுதி இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளது.

குறித்த சந்திப்பின் போது இடைக்கால அரசாங்கம் தொடர்பில் உறுதியான கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்த 41 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார்.

Previous Story

கோட்டா ஆதரவு பேரணி: கலந்து கொண்டவர்களக்கு 5000 ரூபாய் - அம்பலப்படுத்தும் நபர்

Next Story

ஜனாதிபதி இராஜினாமா செய்வதுதான் ஒரே வழி - ரிஷாட் பதியுதீன்