அழைப்பு விடுக்கும் அணுரா!

நஜீப்

கடந்த புதன், நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பது பற்றிய சர்வ கட்சிக் கூட்டம் நடந்திருக்கின்றது. ஆனால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் தான் நாடு இந்தப் பேரழிவைச் சந்திக்க முக்கிய காரணம்.

நமக்கும் கூட்டத்துக்கு அழைப்புக் கிடைத்தது கள்வர்களுடன் போய் நாங்கள் என்னதான் பேச இருக்கின்றது என்று நுகேகொட கூட்டத்தில் கேள்வி எழுப்பி  இருக்கின்றார் ஜேவிபி தலைவர் அணுரகுமார திசாநாயக்க.

இவர்களை பதவியில் இருந்து விரட்டியடிக்க மக்கள் அணிதிறள வேண்டும். அப்போதுதான் மக்கள் அனுபவிக்கின்றது துன்பங்களில் இருந்து நாடு விடுபட முடியும். அதன் பின்னர் அமைகின்ற அரசங்கத்திலும் மக்கள் பங்காளிகளாக வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அடுத்தவர்களையும் விளிப்பூட்டுங்கள் எனவும் அவர் பகிரங்க அழைப்பு விடுத்ததுடன்,

அரச தலைவர்களின் மனைவி பிள்ளை குட்டிகள் எல்லோரும் அமெரிக்கர்கள்.! அவர்களும் அங்கு ஓடி விடுவார்கள். நாங்கள் எங்குதான் ஓட முடியும் எங்கள் வாழ்வும் சாவும் இந்த மண்ணில்தான் என்று கரகேஷத்துக்கு மத்தியில் அவர் அங்கு பேசினார்.

நன்றி:ஞாயிறு தினக்குரல் 27.03.2022

Previous Story

பசில் பகிரங்கப்படுத்ததை அம்பலப்படுத்திய சர்வதேச நாணய நிதியம்!

Next Story

 அமைச்சர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை