-நஜீப்-
வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்னாள் ஜேவிபி. நாடாளுமன்ற உறுப்பினர். இந்த அரசாங்கத்தை விரட்டியக்கின்ற பேரணி சில தினங்களுக்கு முன்னர் நுகோகொடையில் நடைபெற்ற போது அதில் அவரும் களத்தில் இருந்தார்.
மக்கள் இந்த அரசாங்கத்தை விரட்டியப்பதில் ஜேவிபியைத்தான் நம்புகின்றார்கள், இது அவர்களினால்தான் முடியும். இந்த முயற்ச்சியை நீங்கள் எப்போது துவங்கப் போகின்றீர்கள் என்று கேட்டதற்கு. அது விரைவில் நடக்கும்.
அவர்களை விரட்டுவது மட்டுமல்ல கொள்ளையடித்த பணத்தையும் நாங்கள் மீட்டெடுத்து அவற்றை மக்கள் நல வேலைத் திட்டங்களில் பயன் படுத்துவோம் என்றும் அவர் உறுதியளித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஹரின் பெர்ணாந்து அரசை விரட்ட பொது வேலைத் திட்டமொன்றுக்கு ஜேவிபிக்கு அழைப்பு விடுத்திருக்கின்றாரோ, அது பற்றி என்ன நிலைபாடு என்று கேட்டதற்கு நல்லதுதான்.
ஆனால் அரசை விரட்டுவது மட்டுமல்ல தூய்மையான அரசாங்கம் ஒன்றையும் அமைப்பது எமது குறிக்கோள். இதற்கு அங்குள்ளவர்கள் பற்றி எமக்கு நிறையவே கேள்விகள் இருக்கின்றது என்றும் குறிப்பிட்டார் டாக்டர்.
நன்றி:ஞாயிறு தினக்குரல் 27.03.2022