கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் 26 வீதமாக பெறுமதியை இழந்துள்ளதாக உலக புகழ்ப் பெற்ற பொருளாதார விஞ்ஞானியான ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பேராசிரியர் ஸ்டீவ் ஹென்க் (Steve Hanke) தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கடனை திரும்ப செலுத்துதல் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு ஆகியன ஊடாக இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிக்குள் மூழ்கியுள்ளதாக ஸ்டீவ் ஹென்க் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக இலங்கை 1884 ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு வரை இருந்ததை போன்று நிதிச் சபையை நிறுவ வேண்டும் எனவும் அவர் ஆலோசனையை முன்வைத்துள்ளார்.