–நஜீப்–
கடந்த காலங்களில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய அனைத்து உரைகளும் கடும் விமர்சனத்துக்கு இலக்காகி இருந்தது. ஆனால் அந்த உரைகளுடன் ஒப்பிடுகின்ற போது இந்த முறை ஜனாதிபதி பாஸ் பண்ணி இருக்கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தப் பேச்சை ஏற்பாடு செய்ததும் ஜனாதிபதி அங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதனை நெறிப்படுத்தியவரும் நமது ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அலகப்பெருமா என்று நமக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கின்றது.
அதன் உண்மைத் தன்மைகள் பற்றி நமக்கு உறுதியாகத் தெரியாவிட்டாலும், இந்த மாற்றத்தின் பின்னணியில் யாரோ ஒரு புத்திஜீவி நிச்சயம் இருந்திருக்க வேண்டும் என்பதை மட்டும் நமக்கு உறுதியாகச் சொல்ல முடியும்.
ஜனாதிபதியின் உரையில் நாட்டு மக்களுக்குச் சொல்லக் கூடிய நல்ல செய்திகள் ஏதுவும் இருக்காவிட்டாலும் அவரது நிதானம், யாதார்த்தத்தை ஏற்றுக் கொண்டது போன்றவைகள் காரணமாகத்தான் ஜீ.ஆர். இந்த முறை சாதாரண சித்தி என்று தேறி இருக்கின்றார். டலஸால் அதற்கு மேல் இந்த ஆளை வைத்து என்னதான் பண்ண முடியும்.!
நன்றி: ஞாயிறு தினக்குரல் 20.03.2022