ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு சஜித் உரை

பொதுமக்களின் ஆட்சியொன்றை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

உங்களால் முடியாதென்றால் நாட்டை எங்களிடம் தந்து விடுங்கள் நாங்கள் செய்து காட்டுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பை முடக்கும் வகையில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய தினம் முன்னெடுத்துள்ளது.

இந்த நிலையில் காலமுகத்திடல் பகுதி மற்றும் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட நிலையில் சஜித் நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருந்தார். இதன்போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் பாரிய கஸ்டங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இதற்கு காரணம் ராஜபக்ச அரசாங்கத்தின் மோசடிகளாகும். இந்தநிலையில் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும் அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டும். அன்று மக்கள் தீர்ப்பை வழங்குவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பேரணியில் கலந்து கொண்ட சரத் பொன்சேகா கருத்து தெரிவிக்கையில், வீட்டிற்கு செல்லுமாறு கூறவே மக்கள் அனைவரும் கொழும்பிற்கு வந்துள்ளனர். அத்துடன் அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும் வரையில் நாம் இந்த நடவடிக்கையை முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஹர்ஷ டி சில்வா கூறுகையில், டொலரொன்றின் விலை 200 ரூபாவாக இருக்கும் போதே இந்த பிரச்சினையை தீர்த்திருக்கலாம் எனினும் இன்று பிற்பகலாகும் போது டொலரின் விலை 280 ரூபாவாக ஆகியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் சம்பிக்க ரணவக்க தெரிவிக்கையில், நீங்கள் செய்தது போதும், வீட்டிற்கு போங்கள் என்ற விடயத்தை கூறவே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Story

கர்நாடகா ஹிஜாப்: தீர்ப்பு

Next Story

அமெரிக்காவில் பசில் செய்த தண்டனைக்குரிய குற்றம்?