-நஜீப்-
ஜேவிபி. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பிரமாண்டமான கூட்டம் ஒன்றை கொழும்பு-காலி முகத்திடலில் நடத்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அதே போன்று ஐக்கிய தேசியக் கட்சியும், மொட்டு அணியும் கூட அங்கு வெற்றிகரமான கூட்டங்களை போட்டிருந்தது.
ஆனால் அந்தக் கூட்டங்களில் கூடி கூட்டத்துக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் தொடர்புகள் இருக்கவில்லை என்பது பின்னர் தெரிய வந்தது.
இந்த முறை அனுராதபுரம் சல்காது மைதானத்தில் ஆளும் தரப்பு கூட்டம் போட அதனை விட பெரிய கூட்டமொன்றை நாம் அங்கு நடாத்திக் காட்டுகின்றோம் என்று சஜித் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மரைக்கார் சவால் விட்டுக் கொண்டிருக்கின்றார்.
சஜித்தும் அதனை உறுதி செய்திருக்கின்றார். இவை எல்லாம் சிறுபிள்ளைத்தன அரசியல் என்றுதான் நாம் நினைக்கின்றோம்.
கூட்டத்துக்கு வருகின்றவர்கள் எல்லோரும் வாக்குகளை போட்டால் 2015 ஜனாதிபதித் தேர்தலில் தற்போதய பிரதமர் தோற்றுப் போய் இருக்க மாட்டார்.
நன்றி:ஞாயிறு தினக்குரல் 13.02.2022