நன்றி: 05.07.2026 ஞாயிறு தினக்குரல்
நஜீப்
கொள்கை கோட்பாடுகளைப் பார்க்காதீர்கள் இனவாதம் மாதவாதங்களை கணக்கில் எடுக்காதீர்கள் நல்லவன் கெட்டவன் கள்வன் காவாளி என்றெல்லாம் ஒதுக்க வேண்டாம்.கொள்கைகள் ஏதுவுமே இல்லாவிட்டாலும் கண்டு கொள்ளாமல் நாங்கள் அனைவரும் முதலில் ஒரு அணியாக இணைய வேண்டும்.
இல்லாவிட்டால் நமக்கு அழிவுதான். இப்படி ஒப்பாரி வைக்கின்றார் ஐமச.சக்தி நடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி. நிதி மோசடி தொடர்பில் தனக்கு எதிராக தற்போது மூன்று குற்றச்சாட்டுக்கள் இருப்பதால் தான் விரைவில் கம்பி எண்ண வேண்டி இருக்கின்றது என்பதனை நன்கு உணர்ந்திருப்பதால் அவர் இந்தக் கோரிக்கைகளை முன்வைக்கின்றார்.
இது போன்ற குற்றச்சாட்டுக்கள் இருப்போர் கைதாகி இப்போது நீதி மன்ற விசாரணைகளை எதிர் நோக்கி வருவதால் தனக்கு ஏற்படுகின்ற அச்சம் காரணமாகத்தான் மனிதன் இப்படி ஒப்பாறி வைத்துக் கொண்டு திரிகின்றார் என்று ஆளும் தரப்பினர் தயாவை கிண்டலடிக்கின்றார்கள்.



