மருத்துவ பீட மாணவர்கள் மீதான தாக்குதல் ; பாதுகாப்பு அமைச்சர் விடுத்த பணிப்புரை

களனி பல்கலைக்கழகத்தின் ராகம வளாக மருத்துவபீட மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளமை குறித்து முறையான விசாரணையினை முன்னெடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத்வீரசேகர பொலிஸ்மாதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்படி களனி பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் தாக்கப்பட்டமை குறித்து சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி களனி பிரிவின் இரு குழுவினர் சம்பவ இடத்திலிருந்து விசாரணையினை மேற்கொண்டுள்ளார்.

எனவே சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் அரச நிறுவனத்திற்கு சொந்தமான மோட்டார் வாகனத்தையும் அதன் சாரதியையும் மாணவர்கள் ராகம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் விசாரணைக்குட்படுத்துமாறு ஆலோசனை.

Previous Story

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

Next Story

குழந்தையை கரடி குழியில் வீசிய தாய்.!