நஜீப்
நன்றி: 26.04.2026 ஞாயிறு தினக்குரல்
மாகாணசபைத் தேர்தல்களை அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கிடைத்ததும் கட்சிகளுடன் பேசிவிட்டு நடாத்த அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.
அதன்படி முதலில் வடக்குக் கிழக்குத் தேர்தல்தான் நடக்கும் என்றும் தெரிய வருகின்றன. இதனால் அங்கு தனது கட்சி நடவடிக்கைகளை விரிவு படுத்துகின்ற நடவடிக்கைகளை ஆளும் என்பிபி ஏற்கெனவே துவங்கி விட்டது.
இதனைப் பார்த்த அங்குள்ள தமிழ் முஸ்லிம் கட்சிகளும் தமது கட்சிக் கிளைகளை அமைக்கின்ற நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட ஆரம்பித்திருக்கின்றன.
இதுவரை கட்சியைப் பற்றிகண்டு கொள்ளாமல் இருந்த தனித்துவத் தலைவர்களும் தமிழ்கட்சிகளும் தமது பிரதேசங்களில் கட்சி வேலைகளை துவங்கி இருப்பதாகத் தெரிகின்றது. ஆ
னால் இதில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவதாகவும் தெரியவில்லை. இங்கு வந்திருந்த இந்திய உப ஜனாதிபதி ராதாகிருஸ்னனிடமும் மாகாண சபைத் தேர்தலை அரசு உறுதி செய்திருக்கின்றதாம்.





