நஜீப்
நன்றி: 19.04.2026 ஞாயிறு தினக்குரல்
1.பாட்டாளிகளின்அப்பன் ராமவும் மகன் அன்பும் தேர்தலில் எதிரும் புதிருமாக நின்று மூட்டைப் பூச்சியை ஒழிக்க வீட்டைக் கொளுத்துகிற வேலை பார்க்கிறார்கள்!
2.கொழும்பு-புறக்கோட்டைபேருந்துநிலையம் பெரும் தொகை காசில் புனரமைத்தது சிறந்த பணி.ஆனால் பெயரத்தான் புநக்கோட்டை எனமாத்திப் போட்டாங்க.!

3.கடந்த தேர்தலில் கட்சி சரிவை சுமந்திரன் ஏத்துக்குறார். சரிந்ததாலே வல்லுணர் குப்புற வீழ்ந்தாராக்கும். ஜேவிபி அரசியலையும் வீழ்ந்தவர்சிலாகித்து பேசினார்.!
4.நமது தாக்குதல்களால் ஈரான் கட்டுமான மற்றும் ஆயுத கட்டுப்பாட்டு மையங்களுக்கு ஒரு சிறு சேதம் கூட ஏற்படவில்லை உளவு அறிக்கையால் டம்ரப் அதிர்ச்சி.!
5.சமாதானக் குழுவை ஏவுகணை வீசி இஸ்ரேல் கொல்ல முயன்றது. அதனால் நாம் துர்க்மேன் போய் அங்கிருந்து ரயிலில் வந்தோம்- ஈரான் கல்வியாளர் மராந்தி.!
6.தற்போது ராஜபக்ஸாக்களின் பண மோசடிகள் தொடர்பான தகவல்கள் வைரலாகி வருகின்றன. இதிலும் ஈஸ்டர் சந்தேக நபர் துவான் சுரேஸ் சாலேக்கும் தொடர்பாம்.
7.கோமாளிகள்கணிப்பு:ஒரு ஜனரஞ்சக தொலைக்காட்சி கஞ்சிபுரத்தில் கட்சிக்கு எட்டு சதவீத வாக்கு என்கிறது. குறிப்பிட்ட கட்சி அங்குபோட்டியிடவே இல்லை.!




