எந்த விளைவையும் சந்திக்க தயார்: ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைன் விவகாரத்தில் எந்த விளைவையும் சந்திக்கத் தயாராக உள்ளதாக ரஷ்யாவுக்கு, அமெரிக்கா அறைகூவல் விடுத்துள்ளது.

கிழக்கு ஐரோப்பாவைசேர்ந்த உக்ரைன்நேட்டோஎனப்படும்வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணையவிரும்புகிறது. இதற்க ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் இந்த இணைப்பிற்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.இதையடுத்து உக்ரைன் மீது போர் தொடுக்கும் நோக்கில் அந்நாட்டு எல்லையில் ஒன்றரை லட்சம் ராணுவத்தினரை ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதனால் எழுந்த போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

 

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் அன்டோனி பிளின்கன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் நேச நாடுகளின் கவலைகள் மற்றும் ரஷ்யாவின் கோரிக்கைகள் தொடர்பான விளக்கங்கள் அடங்கிய கடிதத்தை ரஷ்ய அரசிடம் அந்நாட்டிற்கான அமெரிக்க துாதர் ஜான் சுல்லிவன் வழங்கியுள்ளார்.

உக்ரைன் இறையாண்மை, எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதே நம் விருப்பம். பேச்சு வாயிலாக அனைத்து பிரச்னைகளையும் தீர்த்துக் கொள்ளவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விரும்புகின்றன.

இதற்கு, உக்ரைன் எல்லையில் இருந்து ராணுவத்தை ரஷ்யா விலக்கி, தீர்வுக்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து ரஷ்யாவின் இறுதி முடிவை எதிர்பார்த்துள்ளோம். ரஷ்யா எத்தகைய முடிவை எடுத்தாலும் அதை எதிர்கொள்ள அமெரிக்கா தயாராக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே அமெரிக்காவைத் தொடர்ந்துநேட்டோஅமைப்பும், உக்ரைனை இணைத்துக் கொள்ளும் முடிவில் மாற்றமில்லை என திட்டவட்டமாக நேற்று தெரிவித்துள்ளது. ‘உக்ரைன் மீது போர் தொடுக்கும் விருப்பம் இல்லைஎன, ரஷ்யா தெரிவித்தாலும், அண்டை நாடான பெலாரஸ் உடன் இணைந்து போர் பயிற்சிகளை நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

 

Previous Story

துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

Next Story

இந்தோனேசியாவின் தீ விபத்து; 21 பேர் உடல் கருகி பலி!