அமரிக்காவில் பண வீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர் ஒருவரை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தகாத வார்த்தையால் திட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது
ஒலி வாங்கி செயற்படவில்லை என்று நினைத்து கேள்வி கேட்ட செய்தியாளரை, ஜோ பைடன் திட்டியுள்ளார்.
வெள்ளைமாளிகையில் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதன்போது செய்தியாளர்கள் சந்திப்பின் முடிவில் செய்தியாளர் ஒருவர், நாட்டில் அதிகரித்து வரும் பண வீக்கம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
இந்தநிலையில் செய்தியாளர்கள் சந்திப்பு முடிவடைந்துவிட்டதாக நினைத்த, ஜோ பைடன், அந்த செய்தியாளரை பார்த்து, “ஒரு முட்டாள்தனமானவர்” என்ற தகாத வார்த்தையால், திட்டியுள்ளார்
இந்த சம்பவம் தொடர்பாக ஜோ பைடன் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.