கண்டியில் இளம் பெண்கள் கைது! 

கண்டி நகரத்தில் உள இரண்டு மாளிகைகளில் இருந்த இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கடந்த 15ஆம் திகதி 6 பெண்கள் உட்பட இரண்டு முகாமையாளர்கள் கைது செய்தது.

கண்டியில் இரண்டு பெரிய மாளிகைகளில் இருந்த இரண்டு விபச்சார விடுதிகளை சுற்றிவளைத்த பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கடந்த 15ஆம் திகதி 6 பெண்கள் உட்பட இரண்டு முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனிவத்தை மற்றும் வித்யார்த்த மாவத்தையில் உள்ள இரு வீடுகளில் இவ்விரு விபச்சார விடுதிகள் இயங்கி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் 20-30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர்கள் பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் போன்ற பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் அங்கு பணத்திற்கு இளம் பெண்கள் விற்பனை செய்யப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் மேலதிக விசாரணைளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Story

ஈலோன் மஸ்க் சொத்து

Next Story

4 டோஸ் போட்டும் யூஸ் இல்லையாம்.-இஸ்ரேல்