நஜீப்
05.10.2025 நன்றி ஞாயிறு தினக்குரல்
என்னதான் தமிழ் மக்கள் மத்தியில் புத்திஜீவிகள் இருந்தாலும் இன்றைய அரசியல் களத்தில் திருகுதாளிகள் அல்லது சந்தர்ப்பவாதிகள்தான் அங்கே காய் நகர்த்தவது போல நமக்குத் தெரிகின்றது.

நமது இந்தக் கருத்தை தமிழ் சமூகம் எந்தளவுக்கு ஜீரணிக்கும் என்பது எமக்குத் தெரியாது. பட்டதை வழக்கம் போல சொல்லிப் போட வேண்டியதுதான். நமது கோட்டையில் நாம்தானே ராஜா.!

தேர்தலில் தமிழ் சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட ‘சிலர்’ ஜனாதிபதியுடன் தமிழர் பிரச்சினைகளைப் பேச நேரம் கேட்டதாகவும். அவர்கள் பச்சோந்தித்தனத்தை நன்கு அறிந்த பெரியவர் இவர்களைக் கண்டு கொள்ளவில்லையாம்.
சம்பந்தன் காலத்திலும் இன்று நாளை தீர்வு நாடகத்தை மேடையேற்றி மூக்குடைபட்ட கூட்டம் தான் இது. இவர்களை ஏகப்பிரதிநிகளாக ஏற்க ஜனாதிபதி தயாரக இல்லையாம்.
வடக்கு கிழக்கில் தனது அணியும் சற்று வலுவாக இருப்பதால் மாகாணசபைத் தேர்தலின் பின் படத்தை ரீலீஸ் பண்ணுவது ஜனாதிபதி திட்டமாம்.





