உக்ரைன் விவகாரம் ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

‘உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தில் தாக்குதல் நடத்தினால் கடுமையான பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்’ என, ரஷ்யாவுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பிய நாடான உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தில் அதன் எல்லையில் ரஷ்யா படைகளை நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ரஷ்ய அதிகாரிகள் இடையே சுவிட்சர்லாந்தில் இன்று பேச்சு நடக்க உள்ளது.

இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளதாவது:உக்ரைன் விவகாரத்தில் எங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்யா எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். நட்பு நாடுகளுடன் இணைந்து ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும்.

ரஷ்யாவுக்கான ஏற்றுமதிகள் நிறுத்தப்படும்.ரஷ்யாவால் அச்சுறுத்தல் உள்ளதால் ஐரோப்பிய நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Previous Story

ஆங் சான் சூ ச்சீக்கு 4 ஆண்டுகள் சிறை

Next Story

நியூயார்க் குடியிருப்பில் தீ  21 பேர் பலி