குளிரூட்டி வெடித்து மாத்தளை – உக்குவெல ஹிசாம்  மரணம்

கண்டி, கெட்டம்பே பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் குளிரூட்டும் இயந்திரம் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் குளிரூட்டியை பழுது செய்து கொண்டிருந்தவர்.

குளிரூட்டிக்குள் இருந்த வாயு வெடிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், எனினும் வெடிப்புக்கான காரணம் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை என்று ஹோட்டலின் முகாமையாளர் கூறியுள்ளார்.

உயிரிழந்தவர் தொழிநுட்பவியலாளரான 24 வயதுடைய மொஹமட் ஹிசாம் மாத்தளை, உக்குவெல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Previous Story

எரிவாயு புரட்சி:கஜகஸ்தான் அரசு கவிழ்ந்தது!

Next Story

"சுவ சுவன" திட்டம்