இஸ்ரேல் கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் இரு விமானிகள் பலியாயினர்.
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின் கடற்கரை நகரமான ஹைபா அருகே நேற்று முன்தினம் கடற்படை ஹெலிகாப்டரில் விமானிகள் பயிற்சியில் ஈடுபட்டனர்.அப்போது எதிர்பாராத வகையில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.
இதில் இரு விமானிகள் பரிதாபமாக பலியாயினர். காயங்களுடன் மீட்கப்பட்ட மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து விமான பயிற்சிக்கு உடனடியாக தடை விதித்துள்ள இஸ்ரேல் விமானப்படை தளபதி, விபத்தில் சிக்கிய ரகத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர்களின் பயன்பாட்டையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.