பாக்: சீனாவிடம் இருந்து 25 போர் விமானங்கள்

இந்தியா வாங்கியுள்ள ‘ரபேல்’ போர் விமானத்திற்கு போட்டியாக, சீனாவிடம் இருந்து 25 போர் விமானங்களை பாக்., வாங்குகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன் பிரான்சிடம் 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதனால் இந்திய விமானப்படை கூடுதல் பலம் பெற்றுள்ளது.

இந்நிலையில் ரபேலுக்கு போட்டியாக சீனாவிடம் இருந்து ‘ஜே -10சி’ போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்க உள்ளது.இது குறித்து பாக்., உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது கூறியதாவது:சீனாவிடம் இருந்து அனைத்து தட்பவெப்ப நிலையிலும் செயல்படும் ஆற்றல் உள்ள 25 ‘ஜே – 10சி’ போர் விமானங்களை வாங்க உள்ளோம். 2022 மார்ச் 23ல் பாக்., தின விழா நடக்க உள்ளது.

அப்போது நடக்கும் அணிவகுப்பில் இந்த விமானங்கள் பங்கேற்கும். ரபேலுக்கு போட்டியாக விளங்கும் இந்த விமானங்களின் சாகச காட்சியை பார்த்து ரசிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Previous Story

சோ்ந்து வாழ கட்டாயப்படுத்த முடியாது-உயா்நீதிமன்றம்

Next Story

இலங்கைக்கு பொருளாதார தடை: சீன நிறுவனம்