இந்திய முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் நெருக்கமான கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
திங்கள் இரவு கங்குலிக்கு மோனோ குளோனல் ஆன்ட்டிபாடி காக் டெயில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் உடல் நிலை சீராக உள்ளதாக அவர் அனுமதிக்கப்பட்ட உட்லேண்ட்ஸ் மருத்துவமனை தன் மருத்துவ அறிக்கையில் கூறியுள்ளது.
கங்குலிக்கு ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டதில் இரண்டு ஸ்டெண்ட்கள் வைக்கப்பட்டுள்ளன.