கட்சிக்கு மாற்றமாக செயற்பட்டால்  நடவடிக்கை-  தாஹிர் எம்.பி

கட்சியின் முடிவுகளை மீறி செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அதன் அதிகாரம் கட்சியின் செயலாளரிடமே உள்ளது என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய அஷ்ரப் தாஹிர் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக நாடளாவிய ரீதியில் தெரிவாகிய 140 உறுப்பினர்களின்  நேற்று (11) திருகோணமலை ஜேபாக் மண்டபத்தில் இடம்பெற்றது.

கட்சியின் கொள்கை

அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கட்சியின் முடிவுக்கு மாற்றமாக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! தாஹிர் எம்.பி | Amparai District Member Of Parliament Ashraf Tahir

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தலில் வெற்றிபெற்ற 140 உறுப்பினர்களும் கட்சியின் கொள்கைகளோடு ஒத்துழைத்து செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

இது கட்சியின் உயர்மட்ட தீர்மானத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். எந்தவொரு பாகுபாடும் இல்லாமல், கட்சி ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக கட்சியின் முடிவுகளை மீறி செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அப்போ அங்கு பலர் பல்டிக்குத் தயாராக இருக்கின்றார்கள் என்றுதான் எச்சரிக்கைக்கான அர்த்தம் போலும்.

Previous Story

தென்னாப்பிரிக்கா: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி பேருந்து.. 49 பேர் பலி! 

Next Story

கம்பளை முஸ்லிம் குடும்பம் மண்டபம் முகாமில் ! தஞ்சம் !