37:நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள், நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று (04.04.2025) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு

அதன்படி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்கள் - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு | Election Commission In Sri Lanka

பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி இணைத்தல், சத்தியக் கடிதம்  மற்றும் பிறப்புச் சான்றிதழின் நகல் தொடர்பான பிரச்சினை என்பவற்றால் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான தமது தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

கும்பமேலா மோனலிசா புதுக்கதை !

Next Story

SLMC ALL OUT...!