1973 ல் தோற்றுவிக்கப்பட்ட கண்டி-உடதலவின்ன அரபாத் இயக்கமும் அதனுடன் இணைந்த விளையாட்டுக் கழகமும் தனது 50 வருடப் பூர்த்தி விழாவை 2023ல் வெகு விமர்சையாகக் கொண்டாட இருக்கின்றது.
அது தனது 44வது வருடப் பூர்த்தி விழாவையும் ஏற்கெனவே கோலாகலமாக நினைவு கூர்ந்திருந்தது பிரதேச மக்களுக்கு நினைவிருக்கும்.
இது தொடர்பான முதல் கட்டக் கலந்துரையாடலொன்று இன்று மாலை ஏழு (7) மணியளவில் (இன்னும் சற்று நேரத்தில்) உடதலவின்னயில் அதன் தலைவர் எம்.என்.எம்.யாசர் தலைமையில் நடைபெற இருக்கின்றது என்ற தகவலை அரபாத் இயக்கத்தின் முக்கியஸ்தரான ஜே.எம். முஜாப் நமக்குத் தெரிவித்தார்.