மகளிர் டி20:IND vs SA: UN-19 உலகக் கோப்பையை வென்ற வென்றது எப்படி?

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

கிரிக்கெட்

இந்த போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 82 ரன்கள் சேர்த்தது.

83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 11.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

இந்த இறுதிப் போட்டி மலேசியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

India players celebrate with the trophy after winning the 2025 Women's Under-19 T20 World Cup, beating South Africa in the final in Kuala Lumpur

இந்த போட்டியில் இந்திய அணியில் அதிகபட்சமாக த்ரிஷா கொங்காடி 44 ரன்கள் எடுத்தார். மேலும் அவர் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்,

இந்திய அணி தரப்பில் பருணிகா சிசோடியா, ஆயுஷி சுக்லா, வைஷ்ணவி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த ஒட்டுமொத்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை.

அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த வெற்றியில் த்ரிஷா முக்கிய பங்கு வகித்தார்.

கிரிக்கெட்
த்ரிஷா கொங்காடி

அற்புதமாக விளையாடிய த்ரிஷா

இந்திய அணி சார்பில் தொடக்க வீராங்கனை த்ரிஷா கொங்காடி 33 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இவரைத்தவிர தவிர, சனிகா சால்கே ஆட்டமிழக்காமல் 26 ரன்கள் எடுத்தார்.

த்ரிஷா அற்புதமான பந்துவீச்சையும் வெளிப்படுத்தி இந்த போட்டியில் இந்திய அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் 4 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

த்ரிஷா தெலங்கானாவை சேர்ந்தவர். வலது கை பேட்டரான த்ரிஷா, உள்ளூர் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காக விளையாடியுள்ளார்.

மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2025 ஏலத்திலும் த்ரிஷாவின் பெயர் இருந்தது, இருப்பினும் அவரை எந்த அணியும் வாங்கவில்லை.

கிரிக்கெட்

வைஷ்ணவி சர்மா

திணறிய தென்னாப்பிரிக்கா

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மிக் வான் வூர்ஸ்ட் 23 ரன்கள் எடுத்தார்.

இந்த போட்டியின் போது ஒட்டுமொத்த தென் ஆப்பிரிக்க அணியும் ரன்களை குவிக்க போராடியது.

மிகவும் துல்லியமாக பந்து வீசிய இந்திய பந்துவீச்சாளர்கள், ரன்களை தடுத்தது மட்டுமின்றி, சரியான நேரத்தில் விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பந்துவீச்சில் கூட தென்னாப்பிரிக்க அணி எந்த புதிய அம்சங்களையும் வெளிப்படுத்த முடியாமல் தோல்வி அடைந்தது.

இந்திய அணியின் பேட்ஸ்வுமன்கள் சிறப்பாக பேட்டிங் செய்து 52 பந்துகள் மீதமிருக்கையிலேயே வெற்றியை கைப்பற்றினர்.

Previous Story

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் 23 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் 18 பேர் பலி

Next Story

லபார் தாஹிர் மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக  நியமனம்