கம்மன்பிலவுக்கு உச்சகட்ட மனநோய்!

“புதிய அரசில் வெளிவிவகார அமைச்சராக சுமந்திரன்:

உதய கம்மன்பில தகவல்”

இனவாதியான கம்மன்பில உச்ச கட்ட மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார் என்று நாம் கருதுகின்றோம். இதற்கு காரணம் கடந்த சில தினங்களாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்து வரும் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.

வழக்கமாக அரசியல் கொந்தரத்து வேலைகளைப் பார்த்து பிழைத்துக் கொண்டிருக்கும் அவர் சில தினங்களுக்கு முன்னர் எந்தவிதமான அங்கிகாரமும் இல்லாத ஈஸ்டர் தாக்குதல் பற்றிய ஒரு அறிக்கை என்று ஒன்றை சந்தைப்படுத்தி மூக்குடை பட்டார்.

இப்போது சுமந்திரனுக்கு புதிய அரசில் வெளிவிவகார அமைச்சு பதவி என்று ஒரு இசுவை முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார். இந்தக் கதைக்கு எந்த அடிப்படையும் இல்லை. அவரே இது எனக்குக் கிடைத்த தகவல் இதன் உண்மைத் தன்மைக்குத் தன்னிடம் ஆதாரம் இல்லை என்று கூறியும் இருக்கின்றார்.

இதிலிருந்து ஆதாரமில்லா கதைகளைச் சொல்லி இந்தத் தேர்தலில் என்பிபி.க்கு நெருக்கடியை ஏற்படுத்த முனைவதுடன் இவர் தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி அனுரவுக்கு சேறுபூசவும் முனைகின்றார். எனவே கம்மன் பில இப்போது உச்சகட்ட அரசியல் மனநோயல் பாதிக்கப்பட்டிருக்கின்றார்.

எனவே சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சு என்பது மனநோயாளியின் உலரலாகத்தான் மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இது அவரது சுமந்திரன் பற்றிய கதைக்கு நமது பதிவு. ஊடகக்காரர்கள் என்ற வகையில் நமக்கு என்பிபி.தலைவர்களுக்கும் நெருக்கமான உறவு இருப்பதால் இது ஒரு விசக் கருத்து என்று நாம் உறுதியாகக் கூறிவைக்கின்றோம்.

இப்போது அவரது புளுகுக் கதையைப் பாருங்கள்

(இது போன்ற மனநோயாளிகள் இந்தக் கதை வரும் நாட்களில் சந்தைப்படுத்தவும் இடமிருக்கின்றது என்பதனையும் நாம் முன் கூட்டி சொல்லிவைக்கின்றோம்.)

தமிழரசுக் கட்சியின் இந்த இரு நிபந்தனைகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளார். எனவே, புதிய அரசில் தமிழரசுக் கட்சி இணையும் என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய அரசில் வெளிவிவகார அமைச்சுப் பதவி, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்படவுள்ளது என எனக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமது அரசுடன் இணையுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எனக்குக் கிடைத்த தகவலைத்தான் வெளிப்படுத்துகின்றேன். இதற்கு சான்று இல்லை. நான் பிழையெனில் அதனை ஜனாதிபதி சரி செய்யலாம்.

புதிய அரசில் வெளிவிவகார அமைச்சராக சுமந்திரன்: உதய கம்மன்பில தகவல் | Anura Agreement With Tamil Arasu Katchi Gammampila

தமிழரசுக் கட்சி அரசுடன் இணையும்

தேர்தலின் பின்னர் தமிழரசுக் கட்சி அரசுடன் இணையும், சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது என்பதுதான் எனக்குக் கிடைத்துள்ள தகவல். இதற்காக இரு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டுக்கும் ஜனாதிபதி உடன்பட்டுள்ளார்.

இவ்வாறு இணக்கம் தெரிவிக்கவில்லையெனில் அதனையும் ஜனாதிபதி மறுக்கலாம். 2015 இல் ஆரம்பமான சமஷ்டி அரசமைப்பு பணியை முன்னோக்கி கொண்டு செல்லுதல் என்பது முதலாவது நிபந்தனை.

புதிய அரசில் வெளிவிவகார அமைச்சராக சுமந்திரன்: உதய கம்மன்பில தகவல் | Anura Agreement With Tamil Arasu Katchi Gammampila

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் என்பது இரண்டாவது நிபந்தனை. அதனை மீள நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இவற்றுக்கு ஜனாதிபதி உடன்பட்டுள்ளார். இதற்கு என்னிடம் சாட்சி இல்லை. தகவல்களை வெளிப்படுத்துகின்றேன். இல்லையெனில் ஜனாதிபதி அது பற்றி தெளிவுபடுத்தலாம்.

உண்மையை நாட்டு மக்களுக்குக் கூறும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது. சுமந்திரன் வெளிவிவகார அமைச்சராவது பிரச்சினை அல்ல, அதற்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்தான் பிரச்சினை.” – என்றார்.

Previous Story

ஹேமா பிரேமதாசவிற்கு  வழங்கப்பட்ட எரிபொருள் கூப்பன்கள்!