NPP வேட்பாளர்கள் தமது நல்ல வாய்ப்பை நழுவ விடுவார்கள்!

-ஜஹங்கீர்-

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தின் கணிசமான வாக்குகள் அனுர குமரவின் வெற்றிக்குப் பங்களிப்பு வழங்கி இருந்தன.

இதனை நம்மிடம் பல என்பிபி-ஜேவிபித் தலைவர்கள் நன்றி உணர்வுடன் பல சந்தர்ப்பங்களில் நினைவு கூர்ந்திருக்கின்றனர்.

வருகின்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற முஸ்லிம் வேட்பாளரின் வெற்றிக்கு ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக் கொண்ட முஸ்லிம் வாக்குகள் பக்க துணையாக இருக்கின்றன.

ஆனாலும் அவர்களின் அறியாவை அனுகுமுறைகள் மற்றும் ஏற்பாடுகளில் உள்ள குறைபாடுகள் காரணமாக இந்த வாக்குகள் அவர்களிடம் இருந்து நழுவிப் போய் அதனால் என்பிபி. போனஸ் ஆசனத்துக்குக் கூட மிகப் பெரிய ஒரு ஆபத்தும் இருக்கின்றது.

இது பற்றிய மிகவும் விரிவான ஒரு அறிக்கை என்பிபி தலைவர்களுக்கும் அதில் வேட்பாளர்களாக களமிறஙங்கி இருக்கின்ற முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் விரைவில் எழுத்து மூலமாகக் கையாளிக்கப்பட இருக்கின்றது.

தேர்தலுக்கு இன்னும் ஏறக்குறைய மூன்று வாரங்கள் இருப்பதால் ஒரு கடின உழைப்பால் இது சரி செய்யப்படவும் வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதற்கான திட்டங்களும் அவர்களிடத்தில் முன்வைக்கப்பட இருக்கின்றது.

இதுபற்றிய தகவலை அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் குழுவில் இயங்கும் தன்னை இனம் காட்டிக் கொள்ள விரும்பாத ஒருவர் நமக்குத் தெரிவித்தார்.

Previous Story

முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் துப்பாக்கிச்சூட்டால் பலி