உயரத்தில் பறக்கும் செங்கொடி!

-நஜீப்-

(நன்றி: 20.10.2024 ஞாயிறு தினக்குரல்)

Anura Kumara Dissanayake | #රටඅනුරට #நாடுஅநுரவோடு #akd #nppsrilanka | Instagram

முஸ்லிம் சமூகத்தினருக்கு கணக்கு பாடம் கற்றுக் கொடுக்கின்ற பணியில் இப்போது பல  தலைவர்கள் களத்தில். இதில் இடது கையில் இருபதற்கு (20) எதிரான கருப்புப் பட்டியைக் கட்டிக் கொண்டு வலது கையால் அதற்கு ஆதரவாக வாக்களித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ஒரு தனித்துவக் கட்சியும் இருக்கின்றது.

இருபதற்கு ஆதரவாக வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டில் கல்முனையில் ஒருவருக்கு வெட்டு. அதே தவறைச் செய்தவர்களுக்கு அம்பாறையிலும் திருமலையிலும் வாய்ப்புக் கொடுத்து வித்தை காட்டி இருக்கின்றது தனித்துவம்.

அனுராவுக்கு வாய்ப்போ கிடையாது என்று புகட்டிய வாத்தி கணக்கில் அவுட். ஆனாலும் வகுப்பு தொடர்கின்றது. சஜித்துக்குத்தான் பிரதமர் வாய்ப்பு என்று இப்போது புதுப் பாடம்.

மீன் பாடும் தோன் நாட்டுக் கலாநிதி ஒட்டு மொத்த மட்டு. பிரதிநிதித்துவமும் தமிழர்களுக்குப் போகுது என்று  புதுக் கணக்கை மேடைகளில் கற்பிக்குதாம். காத்தான் நகரில் செஞ்சடைகள் கொடி உயர்வாகப் பறப்பதால் கலாநிதிக்கு நடுக்கமாம்.

Previous Story

ஜம்மியத்துல் உலமா சபை விலை போய் விட்டதா?

Next Story

ராஜா சாகும் வரை அரசியலில்!