-நஜீப்-
(நன்றி: 20.10.2024 ஞாயிறு தினக்குரல்)
அண்மையில் ஜனாதிபதி அனுர குமாரவைச் சந்தித்த சிறீதரன் அவருக்கு தனது வாழ்த்துக்களை நேரடியாகத் தெரிவித்ததுடன் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதியுடன் ஒத்துழைத்து தமது கட்சி அரசியலை முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அத்துடன் அவர் ஜனாதிபதி அனுரகுமாரவிடம் இப்படி ஒரு கருத்தையும் சுட்டிக் காட்டி இருந்தார். நாங்கள் உங்களுடன் ஒத்துழைக்கா விட்டாலும் நமது இளம் தலைமுறையினர் உங்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி விட்டார்கள்.
பொதுத் தேர்தலில் கூட இந்த முறை உங்களது கட்சிக்குப் பல ஆசனங்கள் வடக்குக் கிழக்கில் கிடைக்க இருக்கின்றது என்றும் சிறீதரன் குறிப்பிட்டிருந்தார்.
ஊழலுக்கும் மோசடிக்கும் எதிரான போராட்டத்தில் நீங்கள் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தில் பெரும் செல்வாக்குப் பெற்றிருக்கின்றது என்பதையும் அவர் மேலும் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஆனால் பொதுத் தேர்தலில் அவரது கட்சி வடக்கு மற்றும் கிழக்கில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி இருப்பது தெரிகின்றது.