-நஜீப்-
நாம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த பிரபலமான தமிழக அரசியல் விமர்சகர் ஒருவர் நமது தேர்தல் தொடர்பாக கடந்த 19ம் திகதி நடாத்திய ஒரு நேர்காணல் நடாத்தி இருந்தார்.
அதில் அவர் குறிப்பிட்ட சில தகவல்கள் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் எற்படுத்தி இருக்கின்றது. அவர் ஒரு சர்வதேச அரசியல் விமர்சகரும் கூட.
இலங்கையில் தேர்தலில் வெற்றி வாய்ப்புப் பற்றி கேட்கப்பட்ட போது, அவர் வழங்கிய பதிலில் சஜித்துக்கும் ரணிலுக்கும்தான் நேரடிப் போட்டி. ரணில் தலைசிறந்த ஒரு அரசியல்வாதி என்றும் சான்றிதழ் கொடுத்திருந்தார்.
இவை எல்லாவற்றையும் விட ஆச்சர்யமான செய்தி என்னவென்றால் வெறும் மூன்று சதவீத வாக்குகளைத் தொடர்ந்து பெற்று வரும் ஜேவிபிக்கு இந்தத் தேர்தலில் ஒரு துளியேனும் வாய்ப்புக் கிடையாது என்று அவர் கூறிஇருந்தார்.
நாமும் இந்தக் குறிப்பை தேர்தலுக்கு முன்புதான் அச்சுக்கு அனுப்பி வைத்திருக்கின்றோம். நமது தமிழக ஆய்வாலர் நம்பிக்கையும் கருத்தும் என்னவாகி இருக்கின்றது என்பது இப்போது தெளிவாகி இருக்கும்.
நன்றி: 22.09.2024 தினக்குரல் ஞாயிறு வாரஇதழ்
5