நாளை இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் அனுர குமாரவுக்கே அதிக வெற்றி வாய்ப்பு என்று இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை உறுதி செய்கின்றது. இது பற்றி தனது செய்திக் குறிப்பில் தகவல் தருகின்றார் முன்னாள் பொலிஸ் அதிகாரி சிரிலால் பிரியந்த.
அத்துடன் நாட்டிலிருந்து தப்பி ஓடி இருக்கின்ற முன்னாள் ஜனாதிபதி கோத்தாபே ராஜபக்ஸ தற்போது பூட்டானில் இருக்கின்றார். ஏற்கெனவே தப்பியோடிய பசில் டுபாய் ஊடாக அமெரிக்கா போய் இருக்கின்றார்.
நாமல் மனைவியும் இரு பிள்ளைகளும் அவரது தாயருடன் ஓடிப்போய் விட்டார்கள். சகோதாரர்களும் தாய் சிரந்தியும் இன்னும் சில மணி நேரத்தில் ஓட இருப்பதாகத் தெரிகின்றது.
இது அனுர குமாரவின் வெற்றியை உறுதி செய்கின்றது. சஜித் அல்லது ரணில் வெற்றி பெறுவார்களானால் இவர்கள் ஓடிப் இருப்பார்களா? எனவே இதிலிருந்து தேர்தல் முடிவுகளை குடிமக்கள் புரிந்து கொள்ள முடியும்.