NPP பதவிக்கு வந்தாலும் அவர்களுக்கு அனுபவம் இல்லாத காரணத்தால் ஆட்சி செய்ய முடியாமல் போகும் என்ற ஒரு கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது.
முன்பு அனுர வெற்றி பெற மாட்டார் என்று சொன்னவர்கள் இப்போது தமது வலியைப் போக்கிக் கொள்ள இப்படி ஒரு புதுக் கதையைப் பேசி வருகின்றார்கள்.
இன்று உலகம் இந்தளவுக்கு முன்னேறி இருக்கின்றது – வளர்ச்சியடைந்திருக்கின்றது என்றால் அதற்கு அடிப்படைக் காரணம் பரீட்சார்த்த முயற்ச்சிகள் தான் என்பதனை யாரும் மறுக்க முடியுமா?
அடுத்து உலகில் தலை சிறந்த ஆட்சியாளர்களாகவும் ஹீரோக்களாகவும் இருந்தவர்களில் பெரும்பாலானோர் வாரிசு அரசியல்வாதிகள் அல்ல. வாரிசு அரசியல் என்பது நமது பார்வையில் ஒரு ஆக்கிரமிப்பு அடக்குமுறை.
இது இலங்கையில் வரலாற்றையும் மக்களின் தலைவிதியையும் மாற்றி அமைக்கின்ற தேர்தல. எனவே மாற்றத்தையும் தேசத்தையும் நமது எதிர்காலச் சந்ததியினரையும் நினைக்கின்றவர்கள் அனுரவுக்குப் புள்ளடியிடுவார்கள்.
அடிமையாக வாழ்நாள் முழுதும் இருந்து விட்டுப் போவது என்று நினைப்பவர்கள், இனவாதிகளுக்கும் டீல் காரர்களுக்கும் அரசியல் வியாபாரிகளுக்கும் துனை நிற்பார்கள். அதுவும் அவர்களின் உரிமை…!