ரங்கேக்கு என்னதான் நடந்தது!

-நஜீப்-

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் ரங்கே பண்டார ரணிலுக்கு மிகவும் விசுவாசமானவர். அண்மைக்காலங்களில் இவர் ரணிலை தொடர்ந்தும் அதிகாரத்தில் வைத்துக் கொள்ள என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தார். இதனால் ரங்கே மக்கள் மத்தியில் மிகவும் நகைப்புக்கு ஆளான ஒரு மனிதனாகவும் பார்க்கப்பட்டார்.

வழங்கப்பட்ட சில பொறுப்புக்களில் இருந்து ரணில் ரங்கேயை வெளியேற்றி இருக்கின்றார் என்ற செய்தி இப்போது வைரலாகி வருகின்றது. இதற்குக் காரணம் அவர் சஜித் அணிக்கு தாவுவதற்காக ஏற்பாடுகளைச் செய்து வந்த தகவல் ரணிலுக்குத் தெரிய வந்ததால் பொறுப்புக்கள் பலவற்றில் இருந்து  அவரை ரணில் தூக்கி இருக்கின்றார்.

செயலாளர் பதவியில் இருந்து அவரை தூக்கினால் அந்த இடத்துக்கு தலதா அல்லது அகில ஆகிய ஒருவர் நியமிக்கப்பட்டலாம் என்றும் தகவல். அதே நேரம் ரவி கருணாநாயக்கவும் பதவியில் கண்வைத்திருப்பதாகத் தெரிகின்றது.

நன்றி 01.09.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ஷேக் ஹசீனா கட்சி தலைவர் மேகாலயா எல்லையில் பிணமாக மீட்பு

Next Story

பொது வேட்பாளரில் தங்கியுள்ள தமிழர் சுய மரியாதை!