அனுர கட்டுப்பணம் செலுத்தினார் ~

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார திசாநாயக்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய அனுரகுமார திசாநாயக்க  எதிர்வரும் 15ஆம் திகதி வேட்புமனுவை தாக்கல் செய்ய தயாராகி வருவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்பும் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும் வேலைத்திட்டத்துடன் கூடிய அரசியலை வெல்வதே தமது கட்சியின் நோக்கமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கட்டுப்பணம் செலுத்தினார் அனுரகுமார திசாநாயக்க | Bond On Behalf Of Anurakumara Dissanayake

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேர்தல் நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும், நாட்டின் தலைமைக்கு தெளிவான அரசியல் தலைவரை நியமிக்கும் பணியில் நாட்டு மக்கள் தற்போது ஈடுபட்டு வருவதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Story

ஷேக் ஹசீனா திரிபுரா தலைநகர் அகர்தலாவில் தஞ்சம்!

Next Story

அரசியலே வேண்டாம்; ஆளை விட்டாப்போதும்-மகன் சஜீப் வசத்