இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் இன்னும் 48 மணி நேரத்தில் 3ம் உலகப் போர் தொடங்கும் என்ற பகீர் கணிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ரஷ்யா – உக்ரைன் மோதல், இஸ்ரேல் போரைத் துல்லியமாகக் கணித்த இவர், இ்போது 3ம் உலகப் போர் குறித்த இந்த கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
இது சர்வதேச அளவில் ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள யாருக்குத் தான் அசை இருக்காது. இதன் காரணமாகவே எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லும் ஜோசியகாரர்களுக்கு எப்போதும் அதிக மவுசு இருக்கிறது.
பாபா வாங்கா
ஜோசியகாரர்கள் நமது வாழ்க்கை என்ன நடக்கும் என்பதைச் சொல்ல முயல்வார்கள்.. ஆனால், சிலருக்கு உலகில் வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கூட துல்லியமாகக் கணிக்க முடியும். பாபா வாங்கா அப்படியோ அரிய சக்தியைப் பெற்றவர். அவர் வரும் காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் எனப் பல கணிப்புகளை விட்டுச் சென்றார். அதில் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் தொடங்கிப் பல விஷயங்கள் அப்படியே நடந்துள்ளன.
நாஸ்ட்ராடாமஸ்
அவரை போலவே பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நாஸ்ட்ராடாமஸ் என்பவர் இருக்கிறார். 1500களில் வாழ்ந்த இவரது பல கணிப்புகளும் அப்படியே நடந்துள்ளன. இதனால் இந்த நாஸ்ட்ராடாமஸுக்கு எப்போதுமே ஒரு மதிப்பு இருக்கும். இதற்கிடையே இந்திய நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பிரபல ஜோதிடர் உலகப் போர் குறித்து சில பகீர் கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.அவரது இந்தக் கணிப்புகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது
உலகம் எப்போது அழியும்
பாபா வாங்கா சொன்ன பகீர் கணிப்பு.. 2024ல் கூட அவரது கணிப்பு அப்படியே நடக்குதே அதாவது இன்று ஆகஸ்ட் 4 அல்லது நாளை ஆகஸ்ட் 5ஆம் தேதிகளில் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். இஸ்ரேல்- ஹமாஸ் போர் மற்றும் ரஷ்யா- உக்ரைன் மோதலை சரியாக முன்கூட்டியே கணித்த அவர், இப்போது உலகப் போர் குறித்துக் கணித்துள்ளார்.
புவிசார் அரசியல் மோதல்கள் எல்லாம் சேர்ந்து 3ம் உலகப் போராக வெடிக்கும் என்பதே அவரது கணிப்பாகும். இந்த கணிப்புகளைச் செய்தவர் வேறு யாரும் இல்லை. பிரபல ஜோதிடர் குஷால் குமார் தான்.
3ம் உலகப் போர்
அதேநேரம் மூன்றாம் உலகப் போர் குறித்து குஷால் குமார் கணிப்பது இது முத்முறை இல்லை. இருப்பினும், உக்ரைன், இஸ்ரேல் போர்களைப் போல மூன்றாவது உலகப் போர் குறித்த இவரது கணிப்புகள் நடக்கவில்லை. முன்னதாக இவர் கடந்த ஜூன் 18ம் 3ம் உலக தொடங்கும் என்று அவர் அறிவித்தார்..ஆனால் அந்த தேதியில் எந்தவொரு அசம்பாவிதமும் இல்லாமல் கடந்துவிட்டது.
பின்னர் ஜூலை 26 முதல் 28க்குள் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என்று கணித்தார்.. ஆனால், அப்போதும் எதுவும் நடக்கவில்லை. இந்தச் சூழலில் தான் அவர் அடுத்த 48 மணி நேரத்தில் உலகப் போர் தொடங்கும் என இப்போது மீண்டும் கணித்துள்ளார்.
இந்த முறையாவது அவரது கணிப்பு உண்மையாக நடக்குமா.. அல்லது இந்த முறையும் எதுவும் நடக்காமல் உலக அமைதி தொடருமா என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.
யார் இவர்
குஷால் குமார் ஹரியானாவின் பஞ்சகுலாவைச் சேர்ந்த வேத ஜோதிட முறையைப் பின்பற்றி வருபவர். ஜோதிடத்தில் அவர் எழுதியுள்ள புத்தகங்கள் அமெரிக்காவில் வெளியாகும் பல முன்னணி ஜோதிட இதழ்களில் கட்டுரைகளாக வெளியாகியுள்ளன. பொருளாதாரம், வானிலை, வணிகம், சர்வதேச மோதல்கள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் இவரது கணிப்புகள் பல முறை அப்படியே நடந்துள்ளன.
பிறந்த நேரத்தை மட்டும் சொன்னால் கூட அவர் வாழ்க்கையை மொத்தமாகக் கணித்துவிடுவாராம். ஆனாலும், பாவம் இவரால் இதுவரை 3ம் உலகப் போர் குறித்து மட்டும் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. இந்த முறையாவது இவரது கணிப்பு உம்மையாகுமா என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.